ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு - 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை
Jul 3 2015 6:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களின் முதல்போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களின் முதல் போகப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்கள் பயனடையும் வகையில், முதல் போக பாசனத்திற்கு பவானிசாகர் அணையில் இருந்து இன்றுமுதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.