ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்ட மூலிகைப் பழத்தை உற்பத்தி செய்து கோவை விவசாயி சாதனை
Jun 24 2015 9:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்ட மூலிகைப் பழத்தை கோவை விவசாயி ஒருவர் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார்.
நோநி என்ற மூலிகை தன்மைக் கொண்ட பழம், புற்றுநோயை குணப்படுத்தக்கூடியதாகும். மேலும், சர்க்கரை வியாதி, கை, கால் மூட்டு வலிகள் போன்ற பல்வேறு நோய்களையும் அது குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும். பண்ணைகளில் மட்டுமே பயிரிடப்படும் இந்த மூலிகை தாவரத்தை, கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மருதாசலம் என்ற விவசாயி, தனது வயலில் பயிரிட்டு வருகிறார். பயிரிட்ட மூன்றரை ஆண்டுகளில் பலன் கொடுக்க தொடங்கும் இம்மரம், 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து காய்க்கும் தன்மை கொண்டது. இந்த நிலையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மூலம் நோநி மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.