காவிரிப் பாசன விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Sep 26 2023 6:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரிப் பாசன விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால், மன உளைச்சலில் உயிரிழந்த ராஜ்குமார் என்ற விவசாயியின் குடும்பத்திற்கு தமிழக அரசு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுத்தியுள்ளார். மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தரும் கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.