ராமநாதபுரத்தில் சிகிச்சைக்கு அழைத்து வந்த பெண் நோயாளி பாலியல் வன்கொடுமை : 108 ஆம்புலன்ஸ் ஊழியரை கைது செய்து போலீசார் விசாரணை
Sep 21 2023 7:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிகிச்சைக்கு அழைத்து வந்த இளம்பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர் கைது செய்யப்பட்டார். திருவாடானையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளராக இருப்பவர் பாலமுருகன். இவர் தொண்டியில் மனநலம் பாதித்த இளம் பெண் ஒருவரை, அவரது தாயுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் இளம் பெண்ணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிப்பறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மனநலம் பாதித்த இளம் பெண் மருத்துவமனை செவிலியர்களிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்தது உண்மை என தெரியவந்ததால் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலமுருகனை கைது செய்தனர்.