புதுக்கோட்டை அருகே 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என புகார் : மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாததை கண்டித்து ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
Sep 21 2023 7:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மகளிர் உரிமைத் தொகை 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சாலைமறியலில் ஈடுபடமுயன்றனர். அப்போது, சமாதானம் பேச வந்த போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.