திருச்சி அருகே மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாதவர்களுக்கான சிறப்பு முகாமில் அலைகழிக்கப்பபடும் பெண்கள் : நீண்ட நேரம் காத்திருந்தும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை என பெண்கள் வேதனை
Sep 21 2023 7:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு நாளொன்றுக்கு 150 பேரின் மனுக்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷின் தொகுதியிலேயே பெண்கள் அலைகழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.