நாகையில் தண்ணீரின்றி காய்ந்த பயிர்களை கண்ணீரோடு அழித்த விவசாயிகள் : கண்களில் கருப்புத்துணி கட்டி வயலில் இறங்கி போராட்டம்
Sep 21 2023 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில், தண்ணீரின்றி 80 நாட்களான குறுவை பயிர்களை அழித்த விவசாயிகள், கண்களில் கருப்பு துணிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அணைகளில் இருந்து உரிய அளவு காவிரி நீர் திறந்துவிடப்படாததால், நாகை மாவட்டம் இளங்கடம்பனூரில், நிலங்கள் வறண்டு, நெற்பயிர்கள் வீணாகின. இதனால் 80 நாட்களான குறுவை பயிர்களை அழித்து எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், வயலில் இறங்கி கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.