தென்காசி அருகே காட்டுத் தீயை அணைக்க முடியாமல் கடந்த 2 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் திணறல்
Jun 7 2023 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் பிடித்த காட்டுத் தீயை அணைக்க முடியாமல் கடந்த 2 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். கடையம் அருகே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக மலைப்பகுதியில் மின்னல் தாக்கியதில் அங்குள்ள மரங்களில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இரவு நேரத்திலும் பற்றி எரிந்த தீ, காடு முழுவதும் பரவி வருவதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரியவகை மரங்களும், மூலிகைச் செடிகளும் தீயில் கருகியுள்ளன. இதனால் வனவிலங்குகள் கீழே இறங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே தீயை விரைந்து அணைத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.