அரிசி கொம்பன் யானையை மதிகெட்டான் சோலை வனப்பகுதிக்கு கொண்டுவரக் கோரி கேரளாவில் ஆர்ப்பாட்டம்
Jun 7 2023 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரிசி கொம்பன் யானையை அது பிறந்த இடமான மதிகெட்டான் சோலை வனப்பகுதிக்கு கொண்டுவர வேண்டும் எனக் கோரி, கேரள மாநிலம் சின்னக்கானப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக் கொம்பன் யானையை பிடித்து, தேக்கடி வனப்பகுதியில் கேரள வனத்துறை விட்டது. பின்னர் அங்கிருந்து தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்த அரிசிக் கொம்பன், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து, மக்களை பயமுறுத்தி வந்ததால், மீண்டும் அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, கன்னியாகுமரி மாவட்ட வனபகுதியில் விடப்பட்டது. இந்நிலையில், உணவு பற்றாகுறையால் உடல் சோர்வுற்று, துதிக்கை உட்பட உடல்களில் பல காயங்கள் இருப்பதால், அரிசி கொம்பன் யானைக்கு சிகிச்சை அளிக்க, அது பிறந்த இடமான மதிகெட்டான் சோலைக்கு கொண்டுவர வலியுறுத்தி கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.