சிவகங்கை அருகே சுங்கச்சாவடியில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் இருட்டில் செயல்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமம்
Jun 7 2023 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் இருட்டில் செயல்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் சுங்கச்சாவடி அருகே வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரிவர எரியாததாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.