பெங்களூருவில் இருந்து கும்பகோணத்திற்கு கடத்தி வரப்பட்ட 700 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் - இருவர் கைது
Jun 7 2023 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெங்களூருவில் இருந்து கும்பகோணத்திற்கு கடத்தி வரப்பட்ட 700 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இருவரை கைது செய்தனர். கும்பகோணம் அருகே சோழபுரத்தில் தட்சிணாமூர்த்தி என்பவர் பான் பராக்கை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது கூட்டாளியான ராஜஸ்தானை சேர்ந்த ரமேஷ்குமார் பெங்களூருவில் இருந்து பான்பராக்கை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கும்பகோணம் புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, காரை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். 7 லட்ச ரூபாய் மதிப்பிலான 700 கிலோ குட்காவை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.