நெல்லை மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை
Jun 7 2023 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கவில்லை எனில், 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு ஜூன் 1-ம் தேதி கார் பருவ சாகுபடிக்காக பெருங்கால் பாசன கால்வாய் திறந்துவிடப்படும். இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சார்ந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்து 756 புள்ளி 62 ஏக்கர் பாசன வசதி பயன்பெறும். இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 1 தேதி தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தண்ணீர் திறந்துவிடவில்லை எனில், 7 கிராம விவசாய மக்களும் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.