திண்டுக்கல் அருகே ஊராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பணியாளர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Jun 7 2023 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஊராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பணியாளர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காலனியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது பொள்ளாச்சி காமலாபுரம் பகுதியில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குடியிருப்பு பகுதிக்கு செல்லக்கூடிய பாதையை மறைத்து கான்கிரேட் வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. மேலும் மயான பாதையை மறைத்து உடல்களை அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு பணிகள் நடைபெறுவது குறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.