திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 12 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிர்கள் பாதிப்பு
Jun 7 2023 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் குடவாசல், நன்னிலம், நீடாமங்கலம் தாலுகாவில் மட்டும் 12 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பாசன மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தப்படியாக விவசாயிகள் பருத்தி சாகுபடியை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தற்போது பருத்தி பயிர் அறுவடையிலும் விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் பல்வேறு சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் தொடக்கத்தில் பெய்த தொடர் மழையால், 50 சதவீதத்துக்கு மேல் பருத்தி பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பருத்தி பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு செய்து ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினால் மட்டுமே தங்களது குடும்பத்தை காப்பாற்ற முடியும் என பருத்தி சாகுபடி விவசாயிகள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.