கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 4 ஆண்டு சிறை : விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
Jun 7 2023 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சங்கராபுரம் அருகே வடகீரனூர் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது முதியவரான நிஷார் என்பவர், அதே கிராமத்தில் வசித்து வரும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த 2021ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், போக்சோ சட்டத்தின் கீழ் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் நிஷாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 16 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெர்மிஸ் தீர்ப்பளித்தார்.