கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 4 ஆண்டு சிறை : விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Jun 7 2023 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சங்கராபுரம் அருகே வடகீரனூர் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது முதியவரான நிஷார் என்பவர், அதே கிராமத்தில் வசித்து வரும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த 2021ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், போக்சோ சட்டத்தின் கீழ் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் நிஷாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 16 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெர்மிஸ் தீர்ப்பளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00