சென்னை கொளத்தூரில் ஏடிஎம் மையத்தின் கேமராவை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞர் : சிசிடிவிகளை வைத்து இளைஞரை கைது செய்த போலீசார்
Jun 7 2023 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கொளத்தூரில் ஏடிஎம் மையத்தின் கேமராவை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கணபதி ராவ் பகுதியில் ஐசிஐசிஐ ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 3-ஆம் தேதி ஏடிஎம் மையம் வளாகத்தில் உள்ள கேமரா உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏடிஎம் காவலாளி, வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ராதகிருஷ்ணன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அங்குள்ள சிசிடிவி-யை ஆய்வு செய்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. சிசிடிவி அடிப்படையில், போலீசார் முகமது இஸ்மாயில் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.