கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேநீர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
Jun 7 2023 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேநீர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் தமிழக அரசின் TANTEA தேநீர் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்த போது கடைக்குள் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் ஊழியர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் கடைக்குள் இருந்த 5 அடி நீள நாகப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.