தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக புகார் : சிங்கப்பூரிலிருந்து சிவகங்கை திரும்பி வந்தவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Jun 7 2023 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் செஞ்சை பள்ளிவாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகக்கூறி முகமது அலி ஜின்னா என்பவரது வீட்டிலும் அவரது மருமகன் சாகுல் ஹமீத் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காரைக்குடி செஞ்சை பள்ளிவாசல் அருகே வசித்து வருபவர் முகமது அலி ஜின்னா. இவரது மருமகன் சாகுல் ஹமீத். சிங்கப்பூரில் இருக்கும்போது தடை செய்யப்பட்ட இயக்கம் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையில் பண பரிவர்த்தனை செய்ததாக கூறி அவர் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில் அமலாக்க துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் காரைக்குடி வைத்திலிங்கம்புரத்தில் உள்ள சாகுல் ஹமீது வீடு மற்றும் செஞ்சை பள்ளிவாசல் பகுதியில் உள்ள அவரது மாமனார் முகமது அலி ஜின்னா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.