காஞ்சிபுரம் அருகே பிரட் ஆம்லெட், சாக்லேட், ஜூஸ் உள்ளிட்டவை இலவசமாக கேட்டு மிரட்டல் : பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்கள் பணியிடை நீக்கம்
Jun 7 2023 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடையில், பிரட் ஆம்லெட், சாக்லேட், ஜூஸ் போன்றவற்றை இலவசமாக கேட்டு மிரட்டல் விடுத்த பெண் காவல் ஆய்வாளர் உள்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட 4 காவலர்கள் சில நாட்களுக்கு முன் படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்த ஜூஸ் கடைக்கு சென்று, விற்பனையாளரிடம் பிரட் ஆம்லெட், சாக்லேட், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றை இலவசமாக கேட்டு தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு, காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட 4 காவலர்களை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.