அம்பத்தூர் பால் பண்ணையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக குழந்தைத் தொழிலாளர்களை நியமித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.... குத்தகை தொழிலாளர் முறையின் மனித உரிமை மீறல்களுக்கு ஆவின் அத்துமீறல்களே சான்று என அறிக்கை...
Jun 7 2023 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குத்தகை தொழிலாளர் முறையின் மனித உரிமை மீறல்களுக்கு ஆவின் அத்துமீறல்களே சான்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் உற்பத்தியை பெருக்குவதற்காக கடந்த சில மாதங்களாக குழந்தை தொழிலாளர்களை பெருமளவில் பணியமர்த்தப்பட்டதாகவும், கடந்த இரு மாதங்களாக ஊதியம் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட குத்தகைத் தொழிலாளர் முறை தான் என விமர்சித்துள்ளார். மேலும், அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.