கன்னியாகுமரி அருகே அழகு பொருட்கள் விற்பனை குடோனில் திடீர் தீ விபத்து : ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அழகு பொருட்கள் எரிந்து நாசம்
Jun 6 2023 6:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு அருகே அழகு பொருட்கள் விற்பனை குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியில் வில்சன் என்பவருக்கு சொந்தமான அழகு பொருட்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. அதன் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குடோனின் ஜன்னல் பகுதியிலிருந்து கரும்புகை வந்துள்ளது. அதனை கண்ட பொதுமக்கள் சத்தம் எழுப்பிய நிலையில், தீ மளமளவென பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட அழகு பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.