கோதையாறு வனப்பகுதியில் அரிசிக்கொம்பனை விட்ட வனத்துறையினர் : குட்டியாறு டேம் பகுதியில் அரிசிக்கொம்பன் நிற்கும் வீடியோ வைரல்
Jun 6 2023 6:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோதையாறு வனப்பகுதியில் அரிசிக்கொம்பன் காட்டுயானையை வனத்துறைனர் பாதுகாப்பாக விட்டனர். தேனி மாவட்டத்தில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட முத்துக்குழி பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் கொண்டு சென்றனர். அப்பகுதிக்கு, யானையை ஏற்றி செல்ல முடியாததால் குட்டியாறு டேம் பகுதியில் அரிசி கொம்பனை விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், யானை விடப்பட்டுள்ள இடத்தில் வனத்துறை, மருத்துவ குழுவினர் முகாமிட்டு யானையை கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, குட்டியாறு டேம் பகுதியில் யானை நிற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.