தருமபுரி மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை : அரசு திட்டங்களில் முறைகேடாக வருவாய் ஈட்டிய புகாரில் நடவடிக்கை
Jun 6 2023 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு திட்டங்களை முறைகேடாக பயன்படுத்தியாக வந்த புகாரையடுத்து தர்மபுரி மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாப்பிரெட்டிபட்டி தாலுகாவில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் கிருஷ்ணனின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான அரசு திட்டங்களில் முறைகேடு செய்ததாகவும், கொரோனா காலத்தில் சுமார் 29 லட்சம் ரூாபாய்க்கு ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும் வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.