தென்கிழக்கு அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் : கேரளாவில் ஒரிரு தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படுவதாக கணிப்பு
Jun 6 2023 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்மண்டலமானது, மேற்கு தென்மேற்கு கோவாவிற்கு 920 கிலோமீட்டர் தொலைவிலும், தெற்கு தென்மேற்கு மும்பைக்கு ஆயிரத்து 120 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.