தருமபுரி ஆட்சித் தலைவராக இருந்த மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் ரெய்டு
Jun 6 2023 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு தருமபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி பணியாற்றியபோது, கிருமி நாசினி கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் மலர்விழி, தற்போது அறிவியல் நகர் துணைத் தலைவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.