திருச்செந்தூரில் சாதிச்சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வியில் சேர முடியாத பழங்குடியின மாணவர் : பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையென புகார்
Jun 6 2023 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 85 சதவீத மதிப்பெண் பெற்றும், சாதிச் சான்றிதழ் இல்லாததால், பழங்குடியின மாணவர் கல்லூரியில் சேர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகே அம்மன்புரம் பகுதி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பூவலிங்கம், + 2 பொதுத்தேர்வில் 600-க்கு 508 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், சாதிச் சான்றிதழ் இல்லாததால், கல்லூரி படிப்பை தொடர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும், இதுவரை வழங்காமல் அலைகழிப்பதாகவும், உடனடியாக சாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.