திண்டுக்கல் அருகே சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் மீது கார் மோதி விபத்து : மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி
May 31 2023 6:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி காரமடை பேருந்து நிறுத்தம் முன்பாக இருந்த மின் கம்பம் மீது கார் மோதியதில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர். காரமடை பகுதியில் பலத்த மழை பெய்ததால், அவ்வழியாக வந்த கார் ஒன்று காரமடை பேருந்து நிறுத்தம் முன்பாக இருந்த மின்கம்பம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் மின்கம்பம் சாய்ந்ததுடன், காரும் சேதமானது. இதனால் காரமடை பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மின்சாரமின்றி மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.