தூத்துக்குடியில் வீரன் வெள்ளையதேவன் 254-வது பிறந்தநாள் விழா கோலாகலம் : மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளைய தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
May 31 2023 6:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில், சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளைய தேவரின் 254 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனின் போர்படை தளபதியாக விளங்கியவரும், வெள்ளையனை எதிர்த்து போரிட்டவருமான மாவீரன் வெள்ளைய தேவரின் 254 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி வீரன் வெள்ளையத் தேவரின் மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வெள்ளையத்தேவரின் வாரிசுகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று மரியாதை செய்தனர்.