தாம்பரம் அருகே அரசுப் பள்ளி எதிரில் மது விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பு : போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார்
May 31 2023 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே அரசுப் பள்ளி எதிரில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் அருகே கண்டியிலிருந்து-வேங்கடமங்கலம் செல்லும் சாலையில் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரே, சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக அதிகாலையில் விற்பனை செய்வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், பள்ளி எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்களிடம் மதுப் பிரியர்கள் வாக்குவாதம் செய்வதால், அவ்வழியாக செல்லும் மாணவர்களும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.