கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான சோபனா பிரேம்குமார் வீட்டில் 6வது நாளாக வருமான வரித்துறை சோதனை : காந்தி கிராமம் இபி காலனியில் உள்ள வீட்டில் ரெய்டு
May 31 2023 3:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 6-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பல்வேறு இடங்களில் கடந்த 26 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். இந்நிலையில் மின்துறை அமைச்சரின் நெருங்கிய நண்பரும் அரசு ஒப்பந்ததாருமான எம்.சி.சங்கர் ஆனந்தின் அலுவலகத்தில் தற்போது சோதனை தொடங்கியுள்ளது.