சென்னையில் வரும் ஜூன் 3ம் தேதி தொடங்கப்படும் 2வது ஆண்டு மலர்கண்காட்சி : செம்மொழி பூங்காவில் 5ம் தேதி வரை நடைபெறும்
May 31 2023 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் மலர் கண்காட்சி வரும் ஜுன் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உதகை மற்றும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதேபோல் சென்னை செம்மொழி பூங்காவில் கடந்த ஆண்டு முதல் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி ஐந்தாம் தேதி வரை நடைபெறும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. கண்காட்சியை பார்வையிடுவதற்கு சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.