சிதம்பரம் அருகே விஷப்பாம்பு கடித்ததில் 3 வயது சிறுவன் பலி : போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Mar 28 2023 7:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விஷபாம்பு கடித்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துணிசிரமேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த திருஞானம் என்பவருடைய 3 வயது மகன் மித்திரன். உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென கதறி அழுதுள்ளார். சிறுவனின் காலை பார்த்தபோது பாம்பு சீண்டியது தெரியவந்தது. உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு மித்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.