சென்னை திருமுல்லைவாயலில் அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழப்பு - ஓட்டுநர் கைது
Mar 28 2023 7:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருமுல்லைவாயலில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடபழனி பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் தனது மனைவி வெண்ணிலா, மகளுடன் திருமுல்லைவாயலில் உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது, பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் வெண்ணிலா என்பவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநரை கைது செய்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.