ஈரோடு அருகே காரில் கடத்தி வரப்பட்ட 480 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல் : தப்பியோடிய கார் ஓட்டுநருக்கு போலீசார் வலைவீச்சு
Mar 28 2023 7:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 480 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சிமிட்டஹள்ளி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வேகமாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்த முற்பட்டபோது, காரை நிறுத்திவிட்டு, ஓட்டுநர் தப்பிச்சென்றார். இதனையடுத்து, போலீசார் சோதனை செய்தபோது, காரில் இருந்த 480 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய சிவமல்லு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.