விருதுநகர் வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில் தனிநபரின் ஆக்கிரமிப்புகள் வட்டாட்சியர் தலைமையில் அகற்றம்
Mar 28 2023 6:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில் தனிநபர் செய்திருந்த ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியர் முத்துமாரி தலைமையில் அதிகாரிகள் அகற்றினர். வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில் வெள்ளைச்சாமி என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கறிக்கடை வைத்துள்ளார். மேலும் அங்கு தகர செட் அமைத்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு குறித்து எழுந்த புகாரின்பேரில் வட்டாட்சியர் முத்துமாரி அங்கு ஆய்வு செய்தார். காவல்துறையினர் பாதுகாப்புடன் வெள்ளைச்சாமியின் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது.