திருப்பூர் அருகே ரூ.50 கோடி மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டோர் போராட்டம்
Mar 28 2023 6:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 50 கோடி ரூபாய் மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம், வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, ரத்தினசாமி, குமரேசன், பிரியா, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரின் இடத்தை மோசடி செய்து நூல் மில்லில் பார்ட்னராக சேர்த்துக் கொள்வதாக கூறி சுமார் 50 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த மோசடி வழக்கில் சிவகுமாருக்கு துணையாக இருந்த விஜயகுமார் ,ராகுல் பாலாஜி, பிரவீனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் பணத்தை பெற்று தருமாறு பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் உடுமலை சாலையில் உள்ள சிவகுமார் உள்ளிட்டோரின் வீடுகளை முற்றுகையிட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் தங்களது சொத்துகளை இழந்து கடந்த மூன்று வருடங்களாக அலைந்து வருவதாகவும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ங்களது சொத்துக்களை மீட்டுத் தருமாறு காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.