காஞ்சிபுரத்தில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது : தலைமறைவாக உள்ள மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு
Mar 28 2023 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகே, மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். திருப்பரங்குன்றம் வட்டம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ராஜபாண்டி என்பவர், மதுரை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த அவர், வில்லாபுரம் வீரபத்திரப்பிள்ளை பகுதியில் உள்ள வர்ம சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜபாண்டியின் உடற்கூறு ஆய்வின் முடிவில், வர்ம மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.