மதுரையில் இளைஞரை கடத்திக் கொலை செய்து புதைத்தாக 3 பேரை போலீசார் கைது
Mar 28 2023 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் இளைஞரை கடத்திக் கொலை செய்து புதைத்தாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 2வது தெரு, மீனாம்பிகை நகர் 6வது தெருவைச் சேர்ந்த சரவணமருது என்ற இளைஞர் கடந்த 14ஆம் தேதி காணாமல் போனதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இந்த நிலையில், மதுரை திருவாதவூர் அருகே சமத்துவபுரம் பகுதியில் சரவணமருது கொலை செய்யப்பட்டு, உடல் புதைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சக்திவேல், ராஜ பிரபு, முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.