கோவில்பட்டி அருகே 8 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் : மொபைல் போனில் கேம் விளையாட நெட் ரீசார்ஜ் செய்யாததே காரணம் என விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Mar 27 2023 6:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவில்பட்டி அருகே 8 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு மொபைல் போனில் கேம் விளையாட நெட் ரீசார்ஜ் செய்யாததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியை சேர்ந்தவர் பெட்டிக்கடை வியாபாரி சுசிகரன். இவரது மகன் குகன். இவர் அங்குள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். குகன் எப்போதும் வீட்டில் உள்ள 2 ஸ்மார்ட் போன்களை எடுத்து நண்பர்களுடன் பப்ஜி , ப்ரி பயர் உள்ளிட்ட கேம்களை விளையாடி வந்துள்ளார். பலமுறை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் 2 செல்போன்களிலும் நெட் தீர்ந்ததால் கேம் விளையாட முடியவில்லை என்ற வேதனையில் இருந்த குகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.