விழுப்புரம் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட தந்தையை கொலை செய்த மகன் - தாயாருக்கும் கத்திக்குத்து

Mar 27 2023 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காலையிலேயே மது அருந்திவிட்டு வந்ததை கண்டித்த தந்தையை, மகன் ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈயகுணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணனுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணி அளவில் மகன் சுப்பிரமணியன் மது அருந்திவிட்டு வந்ததால், தந்தை பாலகிருஷ்ணனுக்கும், மகன் சுப்பிரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தந்தை பாலகிருஷ்ணனை துரத்திச் சென்ற மகன், கத்தியால் குத்திக் கொலை செய்தார். மேலும், கணவரை காப்பாற்ற முயன்ற ரங்கநாயகியையும், சுப்பிரமணி கத்தியால் குத்தியதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மகன் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00