மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை கழக நிர்வாகிகள் மூலம் உடனடியான நிறைவேற்றிய சின்னம்மா - தாயுள்ளத்துடன் உதவிய சின்னம்மாவுக்கு மாற்றுத்திறனாளிகளான மல்லிகா, செளந்தராஜன் மகிழ்ச்சி பொங்க நன்றி
Feb 1 2023 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தங்களது கோரிக்கையை ஏற்று மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கிய அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான மல்லிகா, செளந்தரராஜன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 25-ம் தேதி அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புரட்சிப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது வளையாம்பட்டு என்ற கிராமத்திற்கு சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவிடம், மாற்றுத்திறனாளிகளான மல்லிகா, செளந்தரராஜன் ஆகியோர் தங்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்க கோரி மனு அளித்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற புரட்சித்தாய் சின்னம்மா, மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்க ஏற்பாடு செய்தார்.
அதன்படி, மாற்றுத் திறனாளிகளான மல்லிகா, செளந்தரராஜன் ஆகியோருக்கு மூன்று சக்கர சைக்கிள்களை கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வழங்கினர். இந்நிகழ்வில் குமார், உதயகுமார், கணேசன், பழனிவேல், எஸ்.ஏ.செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தங்களது உதவிக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி, தாயுள்ளத்துடன் தங்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மாற்றுத்திறனாளிகளான மல்லிகா மற்றும் செளந்தரராஜன் ஆகியோர் மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர்.