மத்திய பட்ஜெட்டில் ஜவுளித்துறைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை
Jan 31 2023 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்குவது போல் ஜவுளி தொழிலுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பருத்தி இறக்குமதி மீதான வரியை முழுமையாக நீக்க வேண்டும், முற்றாக அழிந்து வரும் சிறு குறு நிறுவனங்கள் மேம்பட வட்டி சலுகை, சிறப்பு நிதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மத்திய அரசின் பட்ஜெட் எதிர்பார்ப்பு. பஞ்சு, நூல் விலை உயர்வால் சிறு,குறு நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், திருப்பூரில் 90 சதவீதத்திற்கு மேலான சிறு,குறு உற்பத்தி நிறுவனங்கள் மூடும் நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்தனர்.