பழநி முருகன் கோவில் தங்கும் விடுதிகளுக்கு கோட்டாட்சியர் நோட்டீஸ் - கட்டடத்தின் உறுதித் தன்மை சான்றிதழ் பெற அறிவுறுத்தல்
Jan 31 2023 3:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புகழ்பெற்ற பழநி முருகன் கோவில் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கு உறுதி தன்மை சான்றிதழ் பெற வேண்டுமென, அக்கோயில் நிர்வாகத்திற்கு கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொதுக்கட்டடங்கள் உரிமைச் சட்டம் விதி எண் 1965-ன் படி, இந்தக் கட்டடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுதி தன்மை சான்றிதழை பெற வேண்டும். ஆனால் இதுவரை இந்த நடைமுறை கடைபிடிக்கப்படாததால், தற்போது கோட்டாட்சியர் அதனை உறுதிப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பழநி மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதை, பூங்கா சாலை, ரயில் நிலைய சாலை என பழநியின் பல இடங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான விடுதிகள், கட்டடங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தங்கி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.