மதுரையில் பங்கு வர்த்தகத்தில் மூதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டதால் தாய், மகன் விஷம் அருந்தி தற்கொலை

Jan 31 2023 2:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் பங்கு வர்த்தகத்தில் மூதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டதால் தாய், மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். மதுரை கரிமேடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கோச்சடை பகுதியில் உள்ள மல்லிகை தெருவில் வசித்து வந்த உமாசங்கர் SMJ என்கிற ஷேர் மார்க்கெட் கம்பெனி நடத்தி வருகிறார். தனது தாய் விஜயலெட்சுமியுடன் உமாசங்கர் வசித்து வரும் நிலையில் அவரது அலுவலக ஊழியர்கள் செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்து கரிமேடு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட, நேரில் சென்ற போலீசார் கதவை உடைத்துசென்று அறையில் பார்த்தபோது உமாசங்கர், அவரது தாயார் விஜயலட்சுமி விஷம் அருந்திய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதனையடுத்து இருவரின் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததில் பல லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00