வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Jan 31 2023 2:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோடை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யுமென கூறப்பட்டுள்ளது. அத்துடன், தென் தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடற்கரை பகுதிகளில் நாளை கரையை கடக்குமெனவும், இதனால் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடுமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.