தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகர மாணவரணி செயலாளர் L.S. பாபு என்கிற பாலகிருஷ்ணன் மாரடைப்பால் மரணம் - அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல்
Jan 31 2023 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகர மாணவரணி செயலாளர் L.S. பாபு என்கிற பாலகிருஷ்ணன், மாரடைப்பால் மரணமடைந்தது குறித்து, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகர மாணவரணி செயலாளர் L.S. பாபு என்கிற பாலகிருஷ்ணன், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
கழகத் தொண்டர் பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.