பெண்களை தவறாக சித்தரிக்க வார் ரூம் அமைத்துள்ளார் அண்ணாமலை - முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு
Jan 31 2023 10:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனி வார் ரூம் அமைத்து தன்னை பற்றி தவறாக சித்தரித்து வருவதாக நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அவர் புகாரும் அளித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைப்பது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தான்....
பாஜகவில் 8 ஆண்டுகளாக இருந்த காய்திரி ரகுராம், தற்போது அண்ணாமலை மீது இப்படி குற்றச்சாட்டுகளை வைக்க காரணம் திருச்சி சூர்யா விவகாரம் தான். பாஜகவில் உள்ள டெய்சி என்பவரிடம் திருச்சி சூர்யா அநாகரிகமாக பேசிய ஆடியோ வெளியாகி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இதற்கு முழு காரணம் காயத்ரி ரகுராம் என கட்சிக்குள் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து வெளியேறினார். தன்னுடைய இந்த முடிவுக்கு அண்ணாமலை மற்றும் அமர் பிரசாத் ரெட்டி தான் காரணம் என ஊடகங்களில் தெரிவித்தார். மேலும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் தன்னைப்பற்றி தவறாக சித்தரித்து சமூக வளைத்தளத்தில் புகைப்படங்களை பரப்புவதாக நடிகை காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி பாபு என்பவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாஜகவில் தனக்கும் சில பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதால்தான் கட்சியிலிருந்து விலகியதாக கூறிய அவர், அண்ணாமலை பொறுப்பு ஏற்றதில் இருந்தே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் போய்விட்டதாக சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அண்ணாமலை வார் ரூம் ஒன்றை வைத்துக்கொண்டு, அவரை எதிர்ப்பவர்களை தவறாக சித்தரித்து அவர்களை மிரட்டி வருவதாகவும் காயத்ரி ரகுராம் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த வார் ரூமின் அட்ராசிட்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அண்ணாமலை மீது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மட்டுமே குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டிருந்த காயத்ரி ரகுராம் முதல்முறையாக காவல்துறையிடம் புகாரை அளித்துள்ளார். அண்ணாமலையின் வார் ரூம் தொடர்பான காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு அண்ணாமலை விளக்கம் தருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.