சேலம் திருமலைகிரி மாரியம்மன் கோயிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை திட்டிய திமுக நிர்வாகி மாணிக்கம் என்பவர் கைது - பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் கொடுத்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீஸார்
Jan 31 2023 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டத்தில் பட்டியல் இனப் பிரிவை சேர்ந்தவரை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக ஒன்றிய கழக செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவரும், திமுக சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான மாணிக்கம் என்பவர் பட்டியல் இன பிரிவை சேர்ந்த பிரவீன் என்பவரை ஊர் பொதுமக்கள் நடுவில் நிற்க வைத்து தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, திமுகவில் இருந்து தற்காலிகமாக அவர், நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் மாணிக்கத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.