ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றி அமைச்சர் கே.என்.நேரு பேசிய வீடியோ தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும் - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
Jan 31 2023 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் தேர்தலுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக திமுக அமைச்சர் பேசிய ஒரிஜினல் வீடியோ தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள சாய்பாபா கோயில் மற்றும் ஈச்சனாரி கோயிலில் வழிபாடு செய்த பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பழம் பெரும் கோவில்களை திமுக எம்பி டி.ஆர்.பாலு இடித்து விட்டதாக பொது மேடையில் பேசியதும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அமைச்சர்களை அமைச்சர் கே.என்.நேரு தகாத வார்த்தையில் பேசுவது உள்ளிட்டவை சமூக நீதிக்கு எதிராக உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேசிய வீடியோ போலியானது என்றால் பதவியில் இருந்து விலக தயார் என்றும் கூறினார்.