ராமநாதபுரம்: சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்துச் சென்ற பேரூராட்சி நிர்வாகம் - உரிமையாளர்களுக்கு அபராதம்
Nov 26 2022 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பேரூராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். முதுகுளத்தூர் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியுறுகின்றனர். அடிக்கடி விபத்துகள் நேரிடுவதால், பலரும் உயிரிழப்பதாக வாகன ஓட்நர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்தும், மாட்டின் உரிமையாளர்கள் கண்டுகொள்ளாததால், பேரூராட்சி ஊழியர்கள் சாலைகளில் சுற்றித் திரிந்த 40க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்துச் சென்றனர். பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும், அடுத்த முறை இதே செயல் நீடித்தால் மாடுகள் ஏலத்திற்கு விடப்படும் என்றும் பேரூராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.